CSK வில் வெளியேறும் முக்கியமான ஆட்டக்காரர்! புதிதாக வருபவர் இவரா ரசிகர்கள் கொண்டாட்டம்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல் ஆட்டத்தில் பங்கேற்கிறது இதனால் csk ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த அணியின் தகவல்களை வெளியிட்டும் சிலர் csk அணிக்காக சில பாடலைகளையும் வெளியிட்டும் வருகின்றனர்.
கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சிறந்த ஆள் ரவுண்டராக வலம் வந்தவர் நியூஸிலாந்து அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான சான்டனர். இந்த ஆண்டு அவரை ஐபிஎல் ஏலத்தில் வெறும் ஐம்பது லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியது. இது csk அணிக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் ஒன்றாகும்.
ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவின் காரணமாக அடுத்தது வரும் மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது csk அணிக்கு ஒரு மிக பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் சான்டனர்க்கு பதிலாக வர போகும் புதிய கிரிக்கெட் வீரர் என்ற எழுந்துள்ளது. தற்போதைய இலங்கை வீரர்களில் முக்கியமான பேட்ஸ்மேன் ஆன அடுத்த ஜெய சூர்யா என்று சொல்லும் அளவுக்கு ஆட்ட திறனை வெளிப்படுத்தும் குஷால் பெரேரா தான் அணிக்குள் புதிதாக இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஹீரோ நிஹாதாஸ் போட்டிகளில் நல்ல ஒரு ஆட்டத்திறனை வெளிப்படுத்தியவர் குஷால் பெரேரா என்பது அனைவரும் அறிந்ததே.
Comments
Post a Comment