வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்! photos
முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
அதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபி ஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment