மும்பை அணியினருக்கு நான் இருக்கிறேன்: லசித் மலிங்கா ஓபன் டாக்
ஐபிஎல் மும்பை அணியின் இளம் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
மலிங்கா அளித்துள்ள பேட்டியில், மும்பைக்கு மீண்டும் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, இந்த முறை எனக்கு வித்தியாசமான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்கிறேன், மும்பை அணி வீரர்களுக்கு நல்ல நண்பனாக இருக்க விரும்புகிறேன்.
என் பங்களிப்பு 100 சதவீதத்தை அவர்களுக்கு அளிப்பேன், எங்களிடம் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
அதே போல இளம் வீரர்களுக்கு எனக்கு சர்வதேச போட்டிகள் குறித்து தெரிந்த விடயங்களை எல்லாம் கற்று கொடுப்பேன் என கூறியுள்ளார்.

Comments
Post a Comment